Mnadu News

ராஜஸ்தானில் கன மழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச், சௌராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.இந்நிலையில் ராஜஸ்தானின் பல இடங்களில் கன மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்மர், ஜலூர், சிரோஹி, பாலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசக்கூடும். அதே நேரம்,ஜெய்சால்மர், பிகானெர், ஜோத்பூர், சுரு, சிகார், நாகர், ஜுன்ஜ்{ஹனு, அஜ்மீர், உதய்பூர் மற்றும் ராஜ்சமந்த் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை வரை கனமழை தொடரும் என்று கணித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More