Mnadu News

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் போன வருட பட்ஜெட் உரையை வாசித்த முதல் அமைச்சர்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் போன வருட பட்ஜெட் உரையை முதல்- அமைச்சர் அசோக் கெலாட் வாசித்ததால் அமளி ஏற்பட்டது. ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் அசோக் கெலாட்; பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பிறகு அவர் பட்ஜெட் உரையை சில நிமிடங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் அமைச்சர் மகேஷ் ஜோஷி, கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை முதல் அமைச்சர் அசோக் கெலாட் படிப்பதை கவனித்தார். உடனடியாக அசோக் கெலாட்டிடம் இதைக்கூறினார். உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசித்ததை நிறுத்தினார். உடனடியாக தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். எனினும் பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More