Mnadu News

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மே 7-ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, மே.8-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.

Share this post with your friends