Mnadu News

வலியில்லாமல் மரண தண்டனையை பரிசீலிக்க குழு: உச்ச நீதிமன்றத்தில் மத்தியரசு தகவல்.

மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற உத்தரவிடக கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது,வலியில்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான மாற்று வழி முறையைக் கண்டுபிடிக்க நிபுணர் குழுவை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்தியரசு தெரிவித்துள்ளது.

Share this post with your friends