Mnadu News

வழிப்பறி வழக்கில் நீக்கம்: பெண் காவல் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் மறுப்பு.

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி. ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் 10 ரூபாயை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.பின்னர் வசந்தி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி வசந்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மீது 2 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More