Mnadu News

விஜய் திவாஸ்: பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை.

கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று விஜய் திவாஸை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) அனில் சௌகான், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படைத் தளபதி விஆர் சௌத்ரி, இந்தியக் கடற்படைத் துணைத் தலைவர் எஸ்என் கோர்மேட் உள்ளிட்டோரும் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘1971 போரில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த துணிச்சலான அனைத்து ஆயுதப் படை வீரர்களுக்கும் விஜய் திவாஸ் அன்று மரியாதை செலுத்துகிறேன். நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதப் படைகளுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More