உக்ரைன் மீது ரஷியப் படைகள் போர்த் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த போரை உடனடியாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். ரஷியாவுக்கு தொடர்ந்து சீனா ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில், சீன அதிபரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும், எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.முன்னதாக உக்ரைனில் இருந்து ரஷியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று ஐ.நா.வில் நேற்று கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More