Mnadu News

வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி: பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை.

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் ஏழாவது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை முதல் 20-ஆம் தேதி வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு செல்வதைத் தடுக்க, வனப்பணியாளர்கள் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகளை வனத்திற்குள் வீசுவதைத் தவிர்ப்பதற்காக வனத்துறை புதிய திட்டம் வகுத்துள்ளது. அதாவது கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முன்பணமாக ரூ.20 பெறப்பட்டு, மலைக்கு சென்று திரும்பும்போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை கொடுத்துவிட்டு, அந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

Share this post with your friends

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.

டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...

Read More