சிவகாசி சிலோன் காலனியை சேர்ந்தவர் 68 வயதான செல்வம் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி 6 மற்றும் 8 வயதுடைய சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த புகாரியில் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை ஸ்ரீPவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செல்வத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். அதோடு;, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.இத்தகைய கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டணை வழங்க வேண்டும் என்று எம்நாடு தொலைக்காட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயேசு கிறிஸ்துவின் ஈடில்லா தியாகத்தை நினைவுகூர்வோம்; பிரதமர் மோடி
நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதிலும்...
Read More