தமிழக சட்டசபையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்வதற்கான மசோதா ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி டெல்லி சென்றார். அவருடன் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அங்கு அவர் மத்திய அமைச்சர்களை சந்திப்பார் எனக்கூறப்பட்டது. தேவைப்பட்டால், பிரதமர் மோடியையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமான வகையில் இருந்ததாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் ஈடில்லா தியாகத்தை நினைவுகூர்வோம்; பிரதமர் மோடி
நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதிலும்...
Read More