Mnadu News

ஒடிசா ரயில் விபத்து: போர்க்களம்போல் பாலாசோர் மாவட்ட மருத்துவமனைகள்.

ஒடிசா ரயில் விபத்தில் அம் மாநிலத்தை சேர்ந்த 650 பேர் காயமடைந்த நிலையில், பாலாசோர் மாவட்ட மருத்துவமனை மற்றும் சோரோ மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் கொண்டு செல்லப்பட்டனர். காயத்துடன் வரும் நோயாளிகள் பலருக்கும் படுக்கை வசதிகள் இல்லாமல் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திண்டாடி வந்த நிலையில், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டு சிகிச்சை அளிக்க மொழிப் பிரச்னையும் பெரிய இடையூறாக அமைந்துவிட்டது.மருத்துவர்கள் பலரும், நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறினர். மருத்துவமனை வளாகத்தின் மற்றொரு பக்கத்தில் ஏராளமான உடல்கள் வெள்ளை நிற துணி போர்த்தப்பட்டு, உறவினர்கள் வந்து அடையாளம் காட்டுவதற்காக கிடத்திவைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பாலாசோர்; மாவட்ட மருத்துவமனைகள் போர்க்களம் போல காணப்படுகின்றது.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More