நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி வந்திருந்தார். ராகுல் காந்தியின் வருகையின் போது அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்து இருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி ராகுல் காந்தி உள்ளே சென்றார். கடைசியில் நின்றிருந்த கார்த்தி சிதம்பரம் கை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி கை கொடுக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விட்டார். கார்த்தி சிதம்பரம் அப்படியே உள்ளே செல்லாமல் கீழே இறங்கி வந்தார். அவரின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக கார்த்தி சிதம்பரத்தை ராகுல் காந்தி தவிர்த்தார். ஏன் அவரை அருகில் வந்தும் கூட முகம் கொடுத்து பார்க்காமல் ஒதுங்கி சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருக்கிறதா? அல்லது வேறு எதுவும் மோதல் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
‘எக்ஸ்’ தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4...
Read More