ஆங்கில ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசியுள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், அரசு பாரபட்சம் இல்லாத விசாரணையை விரும்புகிறது.அதே நேரம், அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆனால், அதற்கு முன்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளைப் பின்னபற்ற வேண்டும்.இந்த வழக்குத் தொடர்பான அரசால் நியமிக்கப்பட்ட குழு, பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த தனது விசாரணை அறிக்கையை அளித்தது. அதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் ஆளுங்கட்சி எம்.பி. என்பதால் விசாரணையில் பாரபட்சம் இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே சமயம்,மல்யுத்த வீராங்கனைகள் அரசின் தலையீட்டை விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தனது உடல்நிலை குறித்து ‘மன்சூர் அலிகான்’ பரபரப்பு அறிக்கை
தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர்...
Read More