Mnadu News

சட்டபூர்வமான முறையில் வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்: அனுராக் தாக்குர் விளக்கம்.

ஆங்கில ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசியுள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், அரசு பாரபட்சம் இல்லாத விசாரணையை விரும்புகிறது.அதே நேரம், அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆனால், அதற்கு முன்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளைப் பின்னபற்ற வேண்டும்.இந்த வழக்குத் தொடர்பான அரசால் நியமிக்கப்பட்ட குழு, பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த தனது விசாரணை அறிக்கையை அளித்தது. அதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் ஆளுங்கட்சி எம்.பி. என்பதால் விசாரணையில் பாரபட்சம் இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே சமயம்,மல்யுத்த வீராங்கனைகள் அரசின் தலையீட்டை விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More