அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, முறையாக வரி கட்டவில்லை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து என வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முறையாக வந்த மத்திய வருமான வரி அதிகாரிகளை கரூரில் திமுகவினர் அடித்து விரட்டியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான 4 அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணம்.தற்போது செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் சோதனை குறித்து ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலை விட பலநூறு மடங்கு ஊழல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. சோதனையோடு நின்று விடாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தவறு இழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் ஈடில்லா தியாகத்தை நினைவுகூர்வோம்; பிரதமர் மோடி
நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதிலும்...
Read More