Mnadu News

நம்பிக்கை துரோகம் செய்தது யார்..? ஓ. பன்னீர்செல்வம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

தேவர் தங்க கவசம் குறித்த கேள்விக்கு:

தங்க கவசத்தை பொருத்தமட்டில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது நீதிமன்றம் கருத்துறை அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம்.

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்த கேள்விக்கு:

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்கு போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே இந்த வழக்கு முடிவு பெறுகின்ற வரையில் நான் கருத்து கூற விரும்பவில்லை.

திமுகவின் பீ டீம் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

ஆரம்பத்திலிருந்து அவருடைய நடவடிக்கை என்ன என்பதை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் யார் மீது குற்றம் என்பதை தமிழக மக்கள் நன்றாக கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட அவர் பொத்தான் பொதுவாக நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் முதல்வரை சந்தித்து பேசியதாக சொல்லி இருக்கிறார் அது முற்றிலும் தவறானது உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை அந்த கடுமையான சூழ்நிலை சொன்னதில்லை, முதல்வரை நான் சந்தித்ததை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார் நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி அரசியலை விட்டு விலக தயாரா என்பதை கேட்கிறேன்.

அதிமுகவை இணைத்து காட்டுவோம் என்று சசிகலா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:

அதிமுக தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம் ஜி ஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா பல தியாகங்களை செய்து இந்த இயக்கத்தை வழிநடத்தியுள்ளார் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்ற நேரத்தில். பல பிரச்சனைகளை விரும்பத் தகாத பிரச்சனைகளை யார் உருவாக்கினார் என்பது நாட்டு மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு பெரிய செயலை பாவத்தை செய்து விட்டு அடுத்தவர் மீது பழி போடுவது என்பது ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பொதுவாகவே மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும், அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தொண்டர்களை எப்போது சந்திக்க உள்ளீர்கள் என்ற கேள்விக்கு:

என்னைப் பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் தொண்டர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும் உரிய நேரத்தில் அவர்களை அணுகுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக இணையும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார்.

Share this post with your friends