பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பெயரில் ‘நன்றி மோடி’ என்ற பிரச்சாரம் – ராகுல் காந்தி விமர்சனம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தினக்கூலி 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல்...
Read More