தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 2015-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை எனவும், அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாகவும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
தனது உடல்நிலை குறித்து ‘மன்சூர் அலிகான்’ பரபரப்பு அறிக்கை
தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர்...
Read More