Mnadu News

பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி: பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.

இலங்கை கொழும்பு – மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் நேற்று பயணிகள் ரயில் அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் தடத்தில் குறுக்கே வந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில், 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அதோடு, பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு-மட்டக்களப்பு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் ஊடுபட்டுள்ளனர்.

Share this post with your friends