மணிப்பூரில் கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 ஆயிரம் ஆயுதங்கள் போலீஸாரின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சரின் எச்சரிக்குப்பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 140 ஆயுதங்கள் சமர்ப்பித்துள்ளனர்.அதோடு, மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் பதற்றம் தணிந்ததையடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் – மல்லிகார்ஜுன கார்கே
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதுவரை 82...
Read More