டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்ததையடுத்து, மார்ச் 9ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், விசாரணை காவல் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா ஆஜர்ப்படுத்தப்பட்டார்.அதையடுத்து சிசோடியாவின் காவலை கூடுதலாக 14 நாள்கள் அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நீட்டித்து சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிபிஐ விசாரித்து வரும் முக்கிய வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
தனது உடல்நிலை குறித்து ‘மன்சூர் அலிகான்’ பரபரப்பு அறிக்கை
தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர்...
Read More