கர்நாடகத்தின் துணை முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தொகுதிக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து பேசியுள்ள டி.கே.சிவகுமார், நீங்கள் என்னை கர்நாடகத்தின் முதல் அமைச்சராக்க அதிக வாக்குகளை அளித்தீர்கள். ஆனால், என்ன செய்வது. கர்நாடக முதல் அமைச்சர்; பதவிக்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார்கள். மூத்த தலைவர்களின் அந்த அறிவுரையை ஏற்று நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், நான் அமைதியாக இருக்க நேர்ந்தது. ஆனால், உங்களிடம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை கர்நாடகத்தின் முதல் அமைச்சராக பார்க்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை. அமைதியாக இருப்போம் என்று பேசியுள்ளார்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
Read More