ஹைய்தி நாட்டில்; ஏற்கெனவே வன்முறை, அரசியல் சரிவு மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள நகரங்களில் திடீரென பெய்த தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஐ.நா வெளியிட்ட தகவலில்,கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் மாயமாகியுள்ளனர். மொத்தம் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 400 பேர் வீடுகளை இழந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதையடுத்து, தேசிய அவசரக்கால பேரிடர் இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஏரியல் ஹென்ரி உத்தரவிட்டுள்ளார்.
மரணத்திற்கு பிறகும் வரி; பிரதமர் மோடி எச்சரிக்கை
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்:...
Read More