Mnadu News

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் தகுதியான 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக எந்தெந்த கடைகளை மூடுவது என்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது. 50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக்கூடிய மதுபானக் கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள், பள்ளி, கோயில்கள் அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் 500 கடைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பிற்கு பின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 500 மதுபானக்கடைகளை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More