Mnadu News

8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ10 ஆக குறைப்பு.

பண்டிகை நாள்களையொட்டி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயில்; இருந்து 20 ரூபாhயக ஆக உயத்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு அக்டோபர் மாதம் 1 முதல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைத்;து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் 10 ரூபாய் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைமேடை கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More