Mnadu News

ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது

ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஜூலை 14ந்தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து நடத்துவது இது 5வது முறையாகும்.

இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணியின் ஜேசன் ராய் மற்றும் ஜானி பெயர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More