Mnadu News

Editor

மக்களவைத் தலைவர் அருகே செங்கோல்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பழனிசாமி கடிதம் .

பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில்,நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் “ஜனநாயகத்தின் சின்னம்” என்ற புதிய நாடளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதே நேரம், தமிழர் பெருமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை விளக்கும் வகையில், மக்களவைத் தலைவர்;; இருக்கைக்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க ‘செங்கோல்’ நிறுவப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் லேசான இரு நிலநடுக்கம்:ரிக்டர் அளவு கோளில் 3.5ஆக பதிவு.

மகாராஷ்டிராவின் பால்கரையில் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி 5என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து மீண்டும் அதே பகுதியில் 3 புள்ளி 3 என்ற ரிக்டர் அளவில் லேசான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.இந்த லேசான இரு நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மணிப்பூர் போன்று மேற்கு வங்காளத்தை பாஜக உருவாக்க முயல்கிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் கான்வாய் வாகனங்கள் ஜார்கிராம் மாவட்டத்தில் குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்களால்; தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கொல்கத்தாவில் பேசியுள்ள அம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மணிப்பூர் போன்ற நிலையை மேற்கு வங்காளத்திலும் உருவாக்க பாஜக முயற்சிக்கிறது.அதே நேரம், அமைச்சர் பிர்பாஹா ஹன்ஸ்தாவின் வாகனம் தாக்குதலின் பின்னணியில் குர்மிகள்; இருப்பதாக நான் நம்பவில்லை. குர்மி சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் மாறுவேடமிட்ட பாஜகவினர் இதன் பின்னணியில் இருந்தனர். என்று கூறியுள்ளார்.

மணிப்பூர் ஆளுநருடன் ராணுவத் தளபதி சந்திப்பு: இயல்பு நிலை திரும்பல் குறித்து பேச்சு.

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி. கலிதா,மற்றும் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் தலைவர் ஆகியோhர் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை ஆளுநர் மாளிகையில்; சந்தித்து பேசினர்.அப்போது, மணிப்பூரின் தற்போதைய நிலைமை பற்றியும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் வழிமுறை குறித்தும் எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய முன் எடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கரூரில் அதிகாரிகள் மீது தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கொளத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது, அவர்களை திமுகவினர் தடுத்தனர்.9 இடங்களில் வருமான வரித் துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்ற நேரத்தில் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்று பொருட்கள் ஆகியவற்றை …

கரூரில் அதிகாரிகள் மீது தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல். Read More »

மக்கள் வாழ்க்கை பிரகாசமாகி உள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை.

கடந்த 10 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் காலையில் ஊழலைச் செய்தியாகக் கொடுக்கும் அரசை நம்பி எப்படி வாழப் போகிறோம் என்று நாம் அனைவரும் போராடிக் கொண்டிருந்தோம்.அதே நேரம் இதில் இருந்து மீள வழியே கிடைக்காதா என்று ஏக்கம் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எழுந்திருந்தது.ஆனால், அதற்கு மாறாக கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் காட்டிய ஒளிமையாமான வாழ்வியல் காட்சிகள் மற்றும் அதற்கான தரவுகள் உங்கள் கண் முன் வைக்கப்பட்டது. அதையடுத்து. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் …

மக்கள் வாழ்க்கை பிரகாசமாகி உள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை. Read More »

டெல்லி மதுபான கொள்கை ஊழலை விட திமுக ஆட்சியின் ஊழல் பல மடங்கு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, முறையாக வரி கட்டவில்லை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து என வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முறையாக வந்த மத்திய வருமான வரி அதிகாரிகளை கரூரில் திமுகவினர் அடித்து விரட்டியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான 4 அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணம்.தற்போது செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் சோதனை …

டெல்லி மதுபான கொள்கை ஊழலை விட திமுக ஆட்சியின் ஊழல் பல மடங்கு. Read More »

பாதுகாப்பான பயணத்தின் முதலிடத்தில் இந்திய ரயில்வே: கொண்டாடும் நிர்வாகம்.

போக்குவரத்துகளிலேயே பலராலும் அதிகம் விரும்பப்படும், மிகவும் பாதுகாப்பான பயணமாக இருப்பது ரயில் போக்குவரத்துதான். பாதுகாப்பான பயணம் என்பது கடந்த காலங்களில் மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, 2006-07 மற்றும் 2013 – 14ஆம் ஆண்டுகளில் ரயில் விபத்துகள் எண்ணிக்கை ஆயிரத்து 243 ஆக இருந்த நிலையில், அதுவே 2014 – 15 மற்றும் 2022 – 23ஆம் ஆண்டுகளில் 638 ஆகக் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. பாஜக தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்றது முதல், இந்திய ரயில்வேயை மேம்படுத்தவும், …

பாதுகாப்பான பயணத்தின் முதலிடத்தில் இந்திய ரயில்வே: கொண்டாடும் நிர்வாகம். Read More »

நிதி ஆயோக் கூட்டத்தை 8 முதல் அமைச்சர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், 2047-க்கான தொலைநோக்கு திட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, புகார்களை குறைப்பதற்கான வாய்ப்புகள், பெண் முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.100 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் 8 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்காததன் மூலம், அவர்கள் தங்கள் மாநிலத்தின் கருத்தை பதிவு செய்வதற்கான …

நிதி ஆயோக் கூட்டத்தை 8 முதல் அமைச்சர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல். Read More »

மக்களால்தான் சாதனைகள் சாத்தியமாகின: 9 ஆண்டு ஆட்சி குறித்து பிரதமர் மோடி ட்விட்.

பொதுமக்களின் ட்வீட்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் அதற்கான தனது ட்விட்டர் பதில் பதிவில், “கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் பல களங்களைப் பெற்றுள்ளோம். வரும் காலங்களில் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறோம். இதன் மூலம் அமிர்த காலத்தில் வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க முடியும். முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையான அரசை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதால் எங்களின் சாதனைகள் சாத்தியமானது.இந்த இணையற்ற ஆதரவு பெரும் பலத்திற்கு ஆதாரமாக உள்ளது. வாழ்க்கையை மாற்றியமைக்கவும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு …

மக்களால்தான் சாதனைகள் சாத்தியமாகின: 9 ஆண்டு ஆட்சி குறித்து பிரதமர் மோடி ட்விட். Read More »