மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அந்த கூட்டத்தில் அவர் இந்து தீவிரவாதம் குறித்து பேசியது வெறும் 30 வினாடிகள். இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே. பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா. 4 தொகுதியில் நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க” என்று பதிவிட்டுள்ளார்.
கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே…பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ Kamal பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க…. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? I think… 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க !
— Kasturi Shankar (@KasthuriShankar) May 16, 2019