Mnadu News

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி – நாசர் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து தேர்தலை மாத காலத்திற்கு ஒத்தி வைத்தனர். இதனிடையே இந்த 6 மாத காலம் நிறைவு பெறுவதால், தேர்தல் குறித்து ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends