Mnadu News

ஆட்சியை கவிழ்க்க திட்டமிடும் எதிர்க்கட்சியினர் -முதல்வர் குமாரசாமி

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது 16 எம் எல் ஏக்கள் ரஜினமான செய்ததன் எதிரொலியாக குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது .

நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசி வருகிறார் முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்த எம் எல் ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அரசியல் சாசனத்தை காக்கவும் ,சபாநாயகரின் உரிமையை பாதுகாக்க போராடுவதாகவும் கூறினார் .

மேலும் பேசிய அவர் ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டம்மிட்டு செயல்படுவதாகவும் அவர் கூறினார் .

Share this post with your friends