தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் .இதனையடுத்து செங்கல்பட்டும் தனி மாவட்டமாக உதயமாகிறது என முதல்வர் அறிவித்துள்ளார் .மேலும் அறிவித்த இரண்டு மாவட்டங்களுக்கும் தனி மாவட்ட ஆட்சியர் பணியமர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் ,மேலும் நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.தென்காசி மாவட்டத்தின் கீழ் தென்காசி, சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய வட்டங்கள் உள்ளடங்கும் என கூறப்படுகிறது.