Mnadu News

சந்திரயான் 2 ஏவுதலை குடியரசுத்தலைவர் நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரில் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் 15-ம் தேதி அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோபோ ரோவர் ஏவப்படுகிறது.

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இஸ்ரோவின் இந்த திட்டத்தை, ஏவப்படும் போது நேரில் பார்வையிட வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரோ தலைவர் சிவன் அழைப்பு விடுத்தார்.

ராம்நாத் கோவிந்த் வருகை தந்தால், ராக்கெட் ஏவுதலைக் காணும் 3-வது குடியரசுத் தலைவர் ஆவார். ஏற்கெனவே, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் 2005-ம் ஆண்டு கார்டோசாட் 1 செயற்கைக் கோள் ஏவுதலையும், 2013-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜியும் செயற்கைக் கோள் ஏவுதலையும் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More