தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் கணேசன். இவர் பல ஆண்டுகளாக பல மக்களுக்கு அவரால் முடிந்த சமூக சேவை செய்து வருகிறார்.
சுனாமி, தானே புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேலான உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு இலவசமாக இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கஜா புயலால் கணேசனின் இல்லம் பெரிதும் சேதமானது. இதனை அறிந்த பிரபல நடிகரும் சமூக சேவகருமான நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு வீடு கட்டி தருவதாக கூறியிருந்தார். அதன்படி தற்போது ரூ.10 லட்சம் செலவில் புதிய வீடு ஒன்றை கணேசனுக்கு கட்டி வழங்கியுள்ளார்.