Mnadu News

சேலத்தில் ஏடிஎம் உடைக்க முயன்று கொள்ளை முயற்சி

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியில் இருக்கும் திருமலை நகரில் உள்ள கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.

மும்பையில் உள்ள அந்த வங்கி அலுவலகத்திற்கு உடனே எச்சரிக்கை தகவல் கிடைத்ததையடுத்து, கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது- போலீசார் அங்கு செல்வதற்குள் கொள்ளையில் ஈடுபட முயன்றவர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து 5 லட்சம் ரூபாய் ரொக்கபணம் தப்பிய நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 5 மாதங்களுக்கு முன்பு இதே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More