எட்னா எரிமலையானது, நேற்றிரவு முதல் செந்நிற எரிகுழம்பு மற்றும் கரும்புகையை வெளியேற்றி வருகிறது. இதன்காரணமாக அதன் அருகிலுள்ள கட்டானியா மற்றும் காமிஸோ ஆகிய இரு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.மேலும் எட்னா எரிமலையிலிருந்து எரிகுழம்புகள் வெளியேறுவது வாடிக்கையான ஒன்று என்பதால் மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை.இந்நிலையில், நேற்றிரவு மலையிலிருந்து எரிகுழம்புடன் தீப்பொரிகள் வெளியேறிய காட்சி மத்தாப்பூ போல் இருந்ததால், அதனை மலையடிவார பகுதிகளில் இருந்த பலரும் பார்வையிட்டும், படம் பிடித்தும் ரசித்தனர்.
Southeast Crater [2017]
© Giuseppe Distefano#Etna #Sicily #volcano #lava pic.twitter.com/xu6ndFMKbp— Etna Walk® (@etnawalk) July 16, 2019