Mnadu News

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்…வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழையும் இல்லை.அதுமட்டுமல்லாமல் ,தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது .

Share this post with your friends