Mnadu News

மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்கும் அரண்மனை நடிகை

‘அரண்மனை’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தவர் நடிகை ஹன்சிகா. இதனை தொடர்ந்து தற்போது ‘மஹா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஒரு நகைச்சுவை கலந்த திகில் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்து இந்திய திரும்பும் நாகரீக பெண்ணாக ஹன்சிகா நடிப்பதாக இயக்குநர் கல்யாண் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் அவருடைய லுக் வித்யாசமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Share this post with your friends