கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள எல்லை மாவட்டமான குமரியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் குளச்சல், முட்டம், குறும்பனை உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரம், நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.கன்னியாகுமரியில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை ஒருசில நாட்கள் மட்டுமே பெய்தது.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இந்நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இளைஞர் உயிரிழந்த விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க...
Read More