அஜித் அவர்களின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் என்றால் அது நேர்கொண்ட பார்வை படம் .ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் அஜித் உட்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும்,அஜித் பற்றியும் பாலிவுட் நடிகை வித்யாபாலன் கூறியதாவது , நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷப்பட்டேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும். எனக்கு பாடல் காட்சியும் உள்ளது. படப்பிடிப்பில் அஜித்குமாரின் ஆளுமை திறன் என்னை கவர்ந்தது. பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு பின்னால் வைத்திருக்கும் ஒருவர் என் பக்கத்தில் நிற்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை.
எல்லோருடனும் மிகவும் எளிமையாக பழகினார். பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் அழுத்தமான கதையம்சத்தில் படம் உருவாகி உள்ளது. இந்த கதையை அஜித்குமார் போன்ற பெரிய நடிகரால்தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும்.இவ்வாறாக வித்யாபாலன் தெரிவித்தார்.