Mnadu News

ஃபீனிக்ஸ் மால் வழக்கு: தற்போதைய நிலையே நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வேளச்சேரியைச் சேர்ந்த தி கிரஸ்ட் குடியிருப்போர் நல சங்கத்தினர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஃபீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் நடைபெறும் வர்த்தக கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.அதே சமயம், விதிமீறல்களை ஆய்வு செய்ய சிஎம்டிஏ, தீயணைப்பு துறை, காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் வர்த்தக கட்டுமானங்கள் மேற்கொள்வதில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.

Share this post with your friends