Mnadu News

‘அக்னி பிரைம்’ பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை 9.45 மணியளவில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட-எரிபொருள் ஏவுகணைக்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏவுகணையின் பாதையானது பல்வேறு புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் டெலிமெட்ரி கருவிகள் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டது என்றும், ஏவுகணை தாக்கும் எல்லை ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 2 ஆயிரம் கலோ மீட்டர் வரை இருக்கும் என்று டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

Share this post with your friends