Mnadu News

அசாம் – அருணாச்சலம்; ஒப்பந்தம் மாநில வளர்ச்சிக்கு உதவும்: அமித்ஷா நம்பிக்கை.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அசாம் முதல் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அருணாச்சல பிரதேச முதல் அமைச்சர்; பிரேமா காண்டு ஆகியோர் கையெழுத்திட்டனர்.அதையடுத்து இந்த கூட்டத்தில் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி,அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்தானது மிகப் பெரிய சாதனை ஆகும். இனி, மோதல்கள் இல்லாத வடகிழக்கு மாநிலத்தை நிறுவுவதற்கான மைல்கல்லை அடைந்துள்ளோம்.அதே சமயம், இந்த ஒப்பந்தம் இரு மாநிலத்திலும் அமைதியான சூழலை உருவாக்குவதுடன் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends