Mnadu News

அஜித்தை புகழ்ந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை

தீரன் படத்தை இயக்கிய வினோத் அஜித் அவர்களை வைத்து இயக்கி வரும் படம் தான் நேர்கொண்ட பார்வை . இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து வந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அனைத்து திரையரங்கில் வெளியிடப்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தலைமையில் அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டது .

இந்நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகை அபிராமி அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் தயாரிப்பாளருக்கும் இயக்குனர் வினோத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மேல் நம்பிக்கை வைத்து நான் மேலும் வளர பிராத்திக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்றும் . அஜித் அவர்களுடன் நடித்தது விண்ணுக்கு சென்று நட்சத்திரங்களை தொட்டு மீண்டும் பூமிக்கு வந்தது போல் இருக்கிறது என்றும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும் அஜித் அவர்களுடன் நடித்த அனுபவத்தை பதிவிட்ருந்தார் .

Share this post with your friends