வடகொரியா இந்த வருடம் மிக தீவிரமாக ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சிக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்து வருகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/101830402_0df2fd49-9609-4bdf-9c80-8c5118f25a75.jpg)
இன்று இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது வட கொரியா என ஜப்பானின் கடலோர காவல்படை தகவல் வெளியிட்டு உள்ளது. அந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே விழுந்ததாகத் தெரிகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/np-file-135315-1648118156.jpg)
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருகிறார் என தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் பல மாதங்களாக எச்சரித்து விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.