உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக லலித் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் நவம்பர் மாதம் 8 அம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு, தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதன்படி, அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று தலைமை நீதிபதி லலித் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பினார். உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதிகாக வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பதவியேற்க உள்ள சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி என்னும் சிறப்பை பெற உள்ளார். இவர் வரும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை அப்பொறுப்பில் இருப்பார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More