Mnadu News

அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவுடனான போர் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது. அவர்கள் இது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தலைத் தடுக்க உலகம் இப்போதே செயல்பட வேண்டும்” என்று பேசினார்.

Share this post with your friends