Mnadu News

அதிமுக மனு அளித்தால் என்னிடம் ஆலோசிக்க வேண்டும் : பேரவைத் தலைவருக்கு ஓபிஎஸ் கடிதம்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சமீபத்திய விசாரணையில், அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக குழு உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என யாரேனும் மனு அளித்தால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறி சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Share this post with your friends