பாலிவுட்டின் முன்னணி பிரபல கதாநாயகியான ஐஸ்வர்யா ராய் இவர் தனது கணவரான நடிகர் அபிஷேக் பச்சனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் .
பொதுவாக ஒரு மனைவி தன்னுடைய கணவனது பிறந்தநாளை கொண்டாடுவதில் ஒரு தண்ணி அழகு தான்.தங்களது அன்பு வெளிபடுமாறு தான் அவர்கள் தேடி தேடி பரிசளிப்பார்கள் , அதிலும் பிரபலங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது ஒரு தனி அழகு தான் .
அந்த வரிசையில் உலக பிரபலம் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராய் தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவரான அபிஷேக் பச்சனின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்தார் , அந்த புகைப்படத்தோடு ‘ ஹேப்பி பர்த் டே மை பேபி ‘ என்று தனது காதலோடு பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த அபிஷேக் பச்சன் தனது மனைவியின் காதலோடு கூடிய வாழ்த்தை பார்த்து மிகுந்த இன்ப அதிர்ச்சியில் சென்றுள்ளார் .
தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணமாகி சில தினங்களிலேயே அவர்களுக்கு உள்ள காதல் காணாமல் போய் விடுகிறது ,ஆனால் பிரபல ஜோடியான ஐஸ்வர்யா ராய் ,அபிஷேக் பச்சனுக்கு திருமணமாகி பன்னீரெண்டு ஆண்டுகள் கடந்தாலும் இவர்களுக்குள் இருக்கும் அன்பு இன்னும் குறையாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது .