Mnadu News

அமர்த்தியா சென்னுக்கு எதிராக நோட்டீஸ்: போராட்டம் நடத்த மம்தா வலியுறுத்தல்.

மேற்கு வங்க மாநிலத்தின் அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும். கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஃபர்கத் ஹக்கிம் கலந்து கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கு உள்ளூர் எம்எல்ஏவான எம்எஸ்எம்இ துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா தலைமை தாங்குவார்.போராட்டத்தின்போது மத்திய பல்கலைக்கழக அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த புல்டோசர்களை அனுப்பி வைக்கலாம். அப்போதும் யாரும் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this post with your friends