Mnadu News

அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் : சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர்,சோனியா மரியாதை.

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, என்சிபி தலைவர் சரத் பவார், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர், குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Share this post with your friends