Mnadu News

அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி கைது:பஞ்சாப் போலீசார் நடவடிக்கை.

கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை அம்ரித்பாலுக்கு ஜோகா சிங் உதவியாக இருந்து வந்துள்ளார.; அதோடு, அம்ரித்பாலை கடந்த மார்ச் 27-ஆம் தேதி பஞ்சாப்புக்கு திரும்ப கொண்டு வந்து விட உதவியதுடன், நேரடி தொடர்பிலும் இருந்து உள்ளார். அம்ரித்பாலுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் வாகன வசதிகளையும் அவர் செய்து கொடுத்து உள்ளார்.அதையடுத்து, அம்ரித்பால் சிங்குடன் ஜோகா சிங் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தேடி வந்த நிலையில், ஜோகா சிங்கை சர்ஹிந்த் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் கைது செய்து உள்ளனர். இதனை டி.ஐ.ஜி. எல்லை சரக நரீந்தர் பார்கவ் உறுதி செய்து உள்ளார்.

Share this post with your friends